ETV Bharat / city

கரோனா கட்டுப்பாடுகள் இன்றுமுதல் நடைமுறை

author img

By

Published : Apr 10, 2021, 6:39 AM IST

சென்னை: கரோனா தொற்றின் தாக்கம் வலுவடைந்துவருவதால் அதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், இன்றுமுதல் (ஏப்ரல் 10) அவை நடைமுறைக்கு வருகின்றன.

கரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை தீவிரமெடுத்துவரும் நிலையில், தமிழ்நாட்டில் நேற்று மட்டும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

கரோனா பரவலைத் தடுக்க முன்னதாக நேற்று முன்தினம் தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவை இன்றுமுதல் நடைமுறைக்குவருகின்றன.

கரோனா கட்டுப்பாடுகள்:

  • கரோனா பரவல் காரணமாக திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்களுக்குத் தடை.
  • வழிபாட்டுத் தலங்களில் இரவு 8 மணிவரை மட்டுமே அனுமதிக்கப்படும்.
  • கோயம்பேடு வணிக வளாகத்தில் சில்லறை காய்கனி அங்காடிகள் மட்டும் செயல்படத் தடை. அதேபோன்று மாவட்டங்களில் உள்ள மொத்த வியாபார காய்கனி வளாகங்களில் சில்லறை வியாபாரக் கடைகளுக்கும் தடைவிதிப்பு.
  • திரையரங்குகளில் 50 விழுக்காடு மட்டுமே அனுமதிக்கப்படும்.
  • புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா செல்லும் பேருந்துகளில் நின்று செல்ல அனுமதியில்லை, அமர்ந்து செல்ல மட்டுமே அனுமதி.
  • பார்வையாளர்களின்றி விளையாட்டுப் போட்டிகள் நடத்தலாம்.
  • கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை 200 பேருக்கு மிகாமல் நடத்தலாம்.
  • சீருந்துகளில் (டாக்ஸி) ஓட்டுநருடன் சேர்ந்து மூவரும், ஆட்டோவில் ஓட்டுநருடன் சேர்ந்து இருவரும் மட்டுமே பயணிக்க அனுமதி.
  • மாவட்ட, மாநகரப் பேருந்துகளில் அமர்ந்துசெல்ல மட்டுமே அனுமதி
  • சின்னத்திரை, திரைப்படங்களுக்கு அனுமதி. இருப்பினும் நடிகர், நடிகர்கள், தொழிலாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும், உரிய வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
  • நீச்சல் குளத்தில் குளிக்க அனுமதியில்லை, ஆனால் பயிற்சி மேற்கொள்ள மட்டும் அனுமதி.
  • தேநீர்க் கடைகள், உணவங்களில் 50 விழுக்காட்டினருக்கு மட்டும் அனுமதி.
  • வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் வருபவர்கள் கட்டாயம் இ-பாஸ் கொண்டுவர வேண்டும்.
  • பொழுதுபோக்குப் பூங்கா, வணிக வளாகங்களில் 50 விழுக்காட்டினருக்கு மட்டும் அனுமதி.
  • கல்வி, சமுதாயம், பொழுதுபோக்கு கலாசார நிகழ்வுகளில் உள் அரங்குகளில் 200 பேருக்கு மட்டுமே அனுமதி.
  • திருமண நிகழ்வில் 100 பேர் மட்டுமே அனுமதி.இறுதி ஊர்வலத்தில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும்.

கரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை தீவிரமெடுத்துவரும் நிலையில், தமிழ்நாட்டில் நேற்று மட்டும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

கரோனா பரவலைத் தடுக்க முன்னதாக நேற்று முன்தினம் தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவை இன்றுமுதல் நடைமுறைக்குவருகின்றன.

கரோனா கட்டுப்பாடுகள்:

  • கரோனா பரவல் காரணமாக திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்களுக்குத் தடை.
  • வழிபாட்டுத் தலங்களில் இரவு 8 மணிவரை மட்டுமே அனுமதிக்கப்படும்.
  • கோயம்பேடு வணிக வளாகத்தில் சில்லறை காய்கனி அங்காடிகள் மட்டும் செயல்படத் தடை. அதேபோன்று மாவட்டங்களில் உள்ள மொத்த வியாபார காய்கனி வளாகங்களில் சில்லறை வியாபாரக் கடைகளுக்கும் தடைவிதிப்பு.
  • திரையரங்குகளில் 50 விழுக்காடு மட்டுமே அனுமதிக்கப்படும்.
  • புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா செல்லும் பேருந்துகளில் நின்று செல்ல அனுமதியில்லை, அமர்ந்து செல்ல மட்டுமே அனுமதி.
  • பார்வையாளர்களின்றி விளையாட்டுப் போட்டிகள் நடத்தலாம்.
  • கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை 200 பேருக்கு மிகாமல் நடத்தலாம்.
  • சீருந்துகளில் (டாக்ஸி) ஓட்டுநருடன் சேர்ந்து மூவரும், ஆட்டோவில் ஓட்டுநருடன் சேர்ந்து இருவரும் மட்டுமே பயணிக்க அனுமதி.
  • மாவட்ட, மாநகரப் பேருந்துகளில் அமர்ந்துசெல்ல மட்டுமே அனுமதி
  • சின்னத்திரை, திரைப்படங்களுக்கு அனுமதி. இருப்பினும் நடிகர், நடிகர்கள், தொழிலாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும், உரிய வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
  • நீச்சல் குளத்தில் குளிக்க அனுமதியில்லை, ஆனால் பயிற்சி மேற்கொள்ள மட்டும் அனுமதி.
  • தேநீர்க் கடைகள், உணவங்களில் 50 விழுக்காட்டினருக்கு மட்டும் அனுமதி.
  • வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் வருபவர்கள் கட்டாயம் இ-பாஸ் கொண்டுவர வேண்டும்.
  • பொழுதுபோக்குப் பூங்கா, வணிக வளாகங்களில் 50 விழுக்காட்டினருக்கு மட்டும் அனுமதி.
  • கல்வி, சமுதாயம், பொழுதுபோக்கு கலாசார நிகழ்வுகளில் உள் அரங்குகளில் 200 பேருக்கு மட்டுமே அனுமதி.
  • திருமண நிகழ்வில் 100 பேர் மட்டுமே அனுமதி.இறுதி ஊர்வலத்தில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.